Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Sunday, April 02, 2006

சொல்லிக்கொடு பேரனே - விகே.பெரியசாமி

சொல்லிக்கொடு பேரனே!!

போர் முரசு கேட்க்குது
தெற்குப்புற மிருந்து -
இனி -
சரவெடிகளாய் குண்டுகள் வீழும் -
சுவரெல்லாம் சல்லடையாய்
கோலம் போடும்.
போராட நம் வீட்டில் யார் இனி??
நீயா??
என் வயிற்றில் இருக்கும்
வரி வரியான சுருக்கங்கள் -
உன் தந்தையை
என் கருவில்
சுமக்கையில் வந்தவை!!

அவனைப் பெற்ற வயிறு இங்கே!!
அவன் எங்கே!!
ஆறடி உயரம் -
ஆல மரம் அவன் - ஆனால்
விதையாகிப் போனான் -
அன்னை மண் காக்க
ஆறு வருடங்களுக்கு முன்
அவன் வீழ்ந்த போது
உனக்கு வயது
ஒன்று தானே!!

எதிரியின் குண்டு
சுவற்றை மட்டுமா
துழைத்த்து? - உன்
அன்னையின் உடலையும் தான்!!

என் குல விளக்கே!! -
நாளை விடுதலையாகும்
ந்ம் மண்ணில் வாழ
குழந்தைகள் தேவை -

பருந்துகளையும்
குள்ள நரிகளையும்
எதிர்க்க கோழிக் குஞ்சுகளா??
நீ ஒதுங்கி நில் என் பேரனே!!
நான் எதிர்ப்பேன்!!
என் வயது
எழுபது தான்!!
என்றாலும் -
என்னுள் ஓடுவது
தமிழ் இரத்தம்!!

என் கரு சுமர்ந்த மகனையும்-
என் ராசாத்தி மருமகளையும்
இயந்திரத் துப்பாக்கியின்
இலக்காக வைத்தவனை
நான் எதிப்பேன் -

நாளை
விடுதலைப் பெறப்போகும்
நம் நாட்டில் வாழுதற்க்கு
நீ வேண்டும்!!

எங்கே ஒரு துப்பாக்கி??
என்னிடம் கொடு!!
இதை எப்படி இயக்குவது?? - அதை
எனக்கு சொல்லிக் கொடு
என் பேரனே!!!


--
என்றும்
நட்புடன்
விகே.பெரியசாமி.

1 Comments:

Blogger பொன்ஸ்~~Poorna said...

மனம் கனக்க வைக்கும் கவிதை.. பேரனிடம் 'abcd' கற்றுக் கொள்ளும் பாட்டிகளுக்கிடையில், துப்பாக்கி இயக்கக் கற்றுக் கொள்வது புதுமை தான்.,.

9:40 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4