Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Sunday, October 08, 2006

தேர்தலோ தேர்தல்!

தேர்தலோ தேர்தல்!

உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் வந்தது. கிராமப் புற தமிழகம் அதிர்கிறது.

முதல் சில நாட்கள் பஞ்சாயத்துக் கூட்டங்கள் மின்னல் வேகத்தில் கூடின, உறுப்பினர்களை போட்டியின்றி தேர்ந்தெடுக்கத்தான். ஆனால் தங்கள் கிராம உறுப்பினர் பதவிகளை ஏலம் விட முடிந்த இடங்களில் மட்டும் சமரசம் ஏற்பட்டது. ஏலத்தின் சராசரி விலை 2000-3000 ஓட்டு உள்ள கிராமத் தலைவர் பதவி 5 இலட்சம் ரூபாய். அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்றெல்லாம் புத்திசாலித் தனமாக யாரும் கேட்கக் கூடாது. மற்ற இடங்களில் எல்லாம் மனுத் தாக்கல் படலம்தான்.

மனு தாக்கலுக்கு பக்கத்தில் உள்ள நகரங்களுக்குத் தான் இவர்கள் செல்ல வேண்டும். சும்மா சென்றால் இவர்கள் செல்வாக்கு தெரிவது எப்படி. ஆள்படை திரட்டிக்கிட்டு டிராக்டர், டெம்போ, ஆம்னி பஸ், வேன், லாரி மற்றும் ஆட்டோக்களோட இவங்க விட்ட அலம்பல்ல அந்தந்த ஊரும் ஆடிடுச்சு. ஒட்டல்ல சாப்பாடு கிடைக்கல, காய்கறி மார்கெட் காலி மார்கெட் ஆயிடுச்சு, ஊர்வன, பறப்பன மற்றும் நடப்பன எல்லாத்துக்கும் கும்ப கும்பலா சொர்க்கலோக பதவிதான். தண்ணிக்கு பஞ்சமே இல்ல.

அப்புறம் சாம, தான, பேத மற்றும் தண்டம் உபயோகித்து வாபஸ் வாங்கச் செய்யும் படலந்தான்.

அடுத்து துண்டு விளம்பரம், சுவரொட்டி வீட்டு சுவறுகள நிரப்ப, இப்ப பிரச்சார நேரம். ஒரே வேசம்- கையை குவிசு வணக்கம், அவங்கவங்க கால்ல விழறது, உறவு முறை சொல்லி ஓட்டுப் போடுங்கன்னு வேண்டுகோள். இரவுகள்ள தண்ணி சப்ளை.இதேதான்.

அடுத்து நடக்க இருப்பன

தேர்தலுக்கு முதல்நாள் பணம் ஒட்டு 50 - 500 வரை, அடிதடியோட அப்பப்ப ஒட்டு போடறமாதிரி தேர்தல், வாக்கு எண்ண படைபலத்தோட கலாட்டா, வெற்றிக் கொண்டாட்டம், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தான்தான் வென்றதாக ஒரு அறிக்கை.

இதில நீக்கமற நிறைந்திருந்தது பாட்டில், பணம் மற்றும் சாதி. காந்தி பிறந்தாள் அன்றுகூட இரட்டிப்பு விலையில சரக்கு கிடைச்சது.

மக்கள் கூட கேட்க மறந்த்தது வேட்பாளர்களின் கொள்கை மற்றும் வாக்குறுதி.

வாழ்க சனநாயகம்.

-சுரேஷ்பாபு.
--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

Friday, October 06, 2006

கென் உளறல்கள்

வெக்கை நிறைந்த
கோடையின் பின்னிரவுகளில்,
வியர்வை குளியலோடு
உறக்கம் விரட்டும்
தருணங்களில்
சில்லென்ற சாரலோடு வீசும்
திடீர் கோடைமழையாய்

என் முகத்தில் வீசும் உன்
ஈரக்கூந்தல்!

உயிரின் கடைசித்துளி
உன் உதட்டில் தானிருக்க,
அமுதும்,நஞ்சும் அங்கே
ஆணவமாய் குடியிருக்க
மரணத்தின் வாசலை
மறக்கடிக்கும் மாமருந்தாய்
உமிழ்நீரின் உயில்...

உன் ஒற்றை முத்தம்

உன் இமைகள் இரண்டும் அசைகையில்
என் இதயம் ஏன் நழுவுது?
நான் பேச விரும்பி நிற்கையில்
என் உதடுகள் உதிர்ந்தா போகுது.

எரியும் நெருப்பாய்
உன் நினைப்பு,
உதிரும் சாம்பலாய்
என் மனசு...

Saturday, September 16, 2006

கனவில் ஒருநாள் கடவுளிடம்...

என் இனிய நண்பர்களுக்கு,வணக்கம், இதுவரை எதுவும், சாதிக்காத நான், என் புதிய முயற்சிய்்ில் நம்பிக்கையுடன் தொடருகிறேன் என் எழுத்துப ்பயணத்தை

நட்பு

கனவில் ஒருநாள்
கடவுளிடம்
"உலகை திருத்த!
ஒரு வழிசொல்!"என்றேன்
மூன்றே எழுத்தில்!
விடை சொல்லி
முடித்துக் ்கொண்டான்!
ந--ட்--பு !
~நம்பிக்கை பாண்டியன்
காதல்

நிமிடத்தில் பலமுறை
மூடித்திறக்கும் இமைகள்!
கண்களின் பார்வையை
மறைப்பதில்லை!

காதலில் இதுபோல்
மனப்பக்குவம் இருந்தால்!
இலட்சியங்கள் ஒருபோதும்
தோற்பதில்லை!்
~நம்பிக்கை பாண்டியன்

இணைய நண்பர்கள்&(கல்லூரி)

எங்கோ பிறந்தோம்!
எங்கோ வளர்ந்தோம்!
அனைவரும் இஙே!
சந்தித்துக்க் கொண்டோம்!
இதயத்தை் நட்பால
சிந்தித்துக ்கொண்டோம்்!

முகங்களைப் பற்றி
யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து
நேசித்ததுமில்லை!
எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை!
ஏமாற்றங்கள் சிறிதுமில்லை1

நல்ல கருத்துக்களை
இடம் மாற்றிக்க ொள்வோம்1
பாரட்டுக்களை
பரிமாறிக்க ொள்வோம்1

கவலைகளை
கிள்ளி அறிவோம்1
இலட்சியஙகளை
சொல்லி மகிழ்வோம்!

உழைப்பை பெருக்க
உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க
நம்பிக்கை தருவோம்!

நாளைய
நாட்களில் சந்திப்போம!்
நன்மைகள்
வளர்த்து சாதிப்போம்!!
~நம்பிக்கை பாண்டியன்

நட்பின்றி அமையா உலகு!
நல்ல மனமே வாழ்க்கைக்கு அழகு!
நட்புடன்
நம்பிக்கைபாண்்டியன்
http://npandian.blogspot.com/

--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

Tuesday, August 15, 2006

வாழ்க கண்ணன்,வாழ்க சுதந்திரம்

இன்று இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆகின்றன. சஷ்டியப்த பூர்த்தி.
தாத்தாவிற்கு வாழ்த்து. எம் தந்தையர் நாடு!

இன்று கோகுலாஷ்டமி. கண்ணன் பிறந்த தினம். என்ன பொருத்தம். தாத்தாவிற்கு
60 வயதானாலும் இந்தியா ஒரு இளமையான நாடு. இந்திய சுதந்திரம் இன்னும்
வளரும் கன்னி. கோகுலம் என்பது சுதந்திரத்தின் குறியீடு. எம்
எல்லோருக்குமே இளமைக்கால நினைவுகளே மிச்ச நாட்களை ஓட்ட உதவுகின்றன. ஒரு
வகையில் கோகுலாஷ்டமி என்பது யசோதை தினம். அம்மாக்கள் நாள். அப்படியொரு
தாய், அப்படியொரு பிள்ளை. மானாமதுரையில் கோகுலாஷ்டமியன்று ஒயிலாட்டம்.
ஏதோ ஒரு கிராமத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஆடிக்கொண்டிருந்தோம். அம்மா
அனுப்பிசாங்கன்னு ஒரு சிப்பந்தி வந்து பை நிறைய வெல்லச் சீடை, முருக்கு,
அப்பம் கொடுத்துவிட்டுப் போனார். அப்படியொரு அன்னை. அப்படியொரு
கோகுலாஷ்டமி. கோகுலாஷ்டமி என்றால் அந்த சின்னச் சின்ன பாதங்களை மறக்க
முடியுமா? கண்ணன் அல்லால் சரன் இல்லை கண்டீர் என்பதைச் சுட்டும் வண்ணம்
சின்னப் பாதங்கள்.


முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போலெங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே!
ஒண்ணுதலீர்! வந்து காணீரே!


(பெரியாழ்வார் திருமொழி)


பிருந்தாவனம், கண்ணன் பிறப்பு எல்லாமே சுந்தந்திரக் குறியீடுகள். கண்ணன்
பாலகன். ஆயின் அவனைக் கொல்ல எத்தனை சதிகள்! ஆனால் மாயக்கண்ணன் எல்லா
சூழ்ச்சிகளிலிருந்தும் தப்பித்து ஆயர்பாடி மக்களைக் காக்கிறான். இந்தியா
என்ற சுதந்திரக் குழந்தைக்கும் தினந்தோரும் ஆபத்துக்கள். ஆயின் தெய்வ
பலத்தாலும், ஒற்றுமை உணர்வாலும் இந்தியா வன்முறை ஒழித்து செம்மையாய்
உயர்ந்து நிற்கும்.


முடிந்தால் ஒரு நடை சிஃபி டாட் காம் போய் சுந்தந்திர தின சிறப்பிதழைக் காணுங்கள்.


http://sify.com/news_info/tamil/


வாழ்க எம் கண்ணன்!
வாழ்க இந்திய சுதந்திரம்!

Monday, July 31, 2006

சங்கம் கண்ட மன்னா

முத்தமிழ் அரசே
முல்லை வேந்தே
நாமக்கல் மைந்தனே
நக்கலின் கொழுந்தனே
கண்ணாடிக் கலைஞனே
தமிழ்மணத்தின்
நகைச்சுவையே

சங்கம் கண்ட மன்னா
சிபி என்ற கண்ணா
கலாய்த்தலுக்கு தனி இடமா?
அதில் எனக்கும் ஒரு இடமா?

சின்னம் கொடுத்த சிங்காரா!
உன்னை
நல்லவன் என்றே நான்
நினைத்தேன்
பொல்லாப்பற்ற வல்லவன்
என்றல்லோ
மகிழ்ந்திருந்தேன்

அய்யகோ!!!!
என்னை கலாய்க்க ஒரு அணி
சொர்ணக்காவும் உம்மோடா
இனி?

உசுபேற்ற-
ஒதுங்கி இருந்தவனை எல்லாம்
கடுப்பேற்ற
அவனை
சுடு அடுப்பேற்ற.....
வந்துவிட்டாய்....
வலைப்பூ கண்டுவிட்டாய்....

வா....வா....
வீறு கொண்டு வா....
வீச்சு பெற்றவனிடம்
நொறுபட வா....விழு...வாங்கும்
அடியில்
எழு.....மீண்டும்
எழு

ஓட்டுவது
உன் குலத்தொழிலாகட்டும்
கலாய்ப்பது
இனி குடும்பத்
தொழிலாகட்டும்....

By: நாமக்கல் சிபி

http://vavaasangam.blogspot.com/2006/07/blog-post_25.html

Thursday, July 27, 2006

ஞாபகம்.

எழுதியவர் வினோத்

சின்ன வயது ஞாபகம். ஆற்றங்கரை மணலில் வீடுகட்டிய ஞாபகம். ஓடியாடி அந்த வீட்டில் ஒருயுகம் வாழ்ந்துவிட்டு, வீட்டை கலைத்து கோவில்கட்டி பக்கத்து வீட்டு செம்பருத்தி பூவெல்லாம் பறித்து சாமிகும்பிட்டு, ஆற்றுநீரில் பன்னீர்தளித்து, பிரசாதமாய் நறுக்கிய கொய்யாகாய் சாப்பிட்டு பக்கத்து தாத்தா தோட்டத்து செடியெல்லாம் பிடிங்கி சாமியாடி, பூவரசஇலையில் செய்த பீப்பீ வைத்து கொல்லாக்கிளையில் டெல்லிக்கும், பாம்பேக்கும் வண்டி ஓட்டி வண்டி மிக வேகமாக போய்க்கொண்டிருக்கும் போது "மோனே.....,மோனே....." அடம்பிடித்த என்னை அத்தைவீட்டுக்கு கூட்டிப்போவதாக சொல்லி குளிப்பாட்டி, நல்ல மணமான சட்டை போட்டு தலைவாரி தாத்தா பக்கத்துல உக்காந்துக்கோ கண்ணா.. என்று சொல்லிச்சென்ற அம்மா திண்ணையில் நின்று கூப்பிடுவாள் .

ஆமாம். இப்ப எதுக்கு இந்த ஞாபகம் என்று கேட்கிறீர்களா?

அம்மா கூப்பிட்டதும் ஓடுவேன் வீட்டுக்கு. தலை, முகமெல்லாம் மண்ணாய் கையில் கோவில் சாமிக்க வாளுடன் அம்மா முன்னாடி போய் நின்று "யாம்மா?" என்று கேட்கும் போது என்னைப்பார்த்த அம்மாவின் முகத்தை பார்க்க வேண்டும்.


( கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம். இல்லையென்றால் கவிதைபுனைந்திருப்பேன். )

Sunday, July 09, 2006

நெஞ்சமெல்லாம்

காதலோ காத லென்று
காலமும் காதல் சொல்லும்
காதலால் காதல் கூட்டம்
காணவே காத லானேன்!
காதலைக் காதல் கொள்ளும்
காதலர் ஈங்கி ருப்பின்
காதலே காத லுக்குக்
காதலால் தூது சொல்வேன்!!

இளமையில் காதல் கொண்டு
இசையிலில் காதல் கொண்டு
இளமயின் காத லாலே
இரவெங்கும் காதல் கொண்டென்!
இளமையைக் காத லுக்கே
இரையென இழந்த நானும்
இளமையின் காலந் தன்னை
இதுவரை மறந்த் தில்லை!

மரங்களில் கூடு கட்டி
மலர்களில் தேனை உண்டு
விரல்களால் கோல மிட்டு
மீட்டிடும் நரம்பைத் தேடி
சுரமெனும் மலையைத் தோண்டிக்
சுழன்றிடும் தென்றல் வீச்சாய்
நிரவிய நெஞ்ச மெல்லாம்
நிறைந்தது காதல் தானே!

இரவா

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4