Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Monday, July 31, 2006

சங்கம் கண்ட மன்னா

முத்தமிழ் அரசே
முல்லை வேந்தே
நாமக்கல் மைந்தனே
நக்கலின் கொழுந்தனே
கண்ணாடிக் கலைஞனே
தமிழ்மணத்தின்
நகைச்சுவையே

சங்கம் கண்ட மன்னா
சிபி என்ற கண்ணா
கலாய்த்தலுக்கு தனி இடமா?
அதில் எனக்கும் ஒரு இடமா?

சின்னம் கொடுத்த சிங்காரா!
உன்னை
நல்லவன் என்றே நான்
நினைத்தேன்
பொல்லாப்பற்ற வல்லவன்
என்றல்லோ
மகிழ்ந்திருந்தேன்

அய்யகோ!!!!
என்னை கலாய்க்க ஒரு அணி
சொர்ணக்காவும் உம்மோடா
இனி?

உசுபேற்ற-
ஒதுங்கி இருந்தவனை எல்லாம்
கடுப்பேற்ற
அவனை
சுடு அடுப்பேற்ற.....
வந்துவிட்டாய்....
வலைப்பூ கண்டுவிட்டாய்....

வா....வா....
வீறு கொண்டு வா....
வீச்சு பெற்றவனிடம்
நொறுபட வா....விழு...வாங்கும்
அடியில்
எழு.....மீண்டும்
எழு

ஓட்டுவது
உன் குலத்தொழிலாகட்டும்
கலாய்ப்பது
இனி குடும்பத்
தொழிலாகட்டும்....

By: நாமக்கல் சிபி

http://vavaasangam.blogspot.com/2006/07/blog-post_25.html

2 Comments:

Blogger ரவி said...

சொம்மா சொல்லக்கூடாது - தெறவுசு கார பயதான் நீங்க...

ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீக...

10:06 PM  
Blogger ஆவி அம்மணி said...

எங்க பாஸ்(பின்னே அவர்தான என்னைத் திறந்துவிட்டது) இவ்ளோ அழகா கவிதை எழுதி கலக்குறாரே!

8:15 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4