Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Sunday, July 09, 2006

நெஞ்சமெல்லாம்

காதலோ காத லென்று
காலமும் காதல் சொல்லும்
காதலால் காதல் கூட்டம்
காணவே காத லானேன்!
காதலைக் காதல் கொள்ளும்
காதலர் ஈங்கி ருப்பின்
காதலே காத லுக்குக்
காதலால் தூது சொல்வேன்!!

இளமையில் காதல் கொண்டு
இசையிலில் காதல் கொண்டு
இளமயின் காத லாலே
இரவெங்கும் காதல் கொண்டென்!
இளமையைக் காத லுக்கே
இரையென இழந்த நானும்
இளமையின் காலந் தன்னை
இதுவரை மறந்த் தில்லை!

மரங்களில் கூடு கட்டி
மலர்களில் தேனை உண்டு
விரல்களால் கோல மிட்டு
மீட்டிடும் நரம்பைத் தேடி
சுரமெனும் மலையைத் தோண்டிக்
சுழன்றிடும் தென்றல் வீச்சாய்
நிரவிய நெஞ்ச மெல்லாம்
நிறைந்தது காதல் தானே!

இரவா

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4