Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Friday, October 06, 2006

கென் உளறல்கள்

வெக்கை நிறைந்த
கோடையின் பின்னிரவுகளில்,
வியர்வை குளியலோடு
உறக்கம் விரட்டும்
தருணங்களில்
சில்லென்ற சாரலோடு வீசும்
திடீர் கோடைமழையாய்

என் முகத்தில் வீசும் உன்
ஈரக்கூந்தல்!

உயிரின் கடைசித்துளி
உன் உதட்டில் தானிருக்க,
அமுதும்,நஞ்சும் அங்கே
ஆணவமாய் குடியிருக்க
மரணத்தின் வாசலை
மறக்கடிக்கும் மாமருந்தாய்
உமிழ்நீரின் உயில்...

உன் ஒற்றை முத்தம்

உன் இமைகள் இரண்டும் அசைகையில்
என் இதயம் ஏன் நழுவுது?
நான் பேச விரும்பி நிற்கையில்
என் உதடுகள் உதிர்ந்தா போகுது.

எரியும் நெருப்பாய்
உன் நினைப்பு,
உதிரும் சாம்பலாய்
என் மனசு...

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4