Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Friday, April 14, 2006

ஆயுதமேந்தியவனுக்கான குறிப்புகள்- சித்தார்த்

ஆயுதமேந்தியவனுக்கான குறிப்புகள்
----------------------------------------------------------------

அது மரம்.

திசைப்பறவை குடியொன்றின் உறைவிடம்.
ஆதவனின் கதிர்கொண்டு
ஓர்காற்று பிரிதாகும்
ரசவாதக் கூடம்.
காட்டாற்று வெள்ளத்தில்
மண்காக்கும் அரண்.
தேடி வரும் உயிர்க்கெல்லாம்
கனி தரும் உணவகம்.

ஆயினும் அது ஒரு மரம் தான்.
தயங்காமல் வெட்டு.

- சித்தார்த்.

--------------------------------------------------
http://angumingum.wordpress.com

--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

Tuesday, April 11, 2006

'எங்களுக்கும் காலம் வரும்

என் முத்தமிழ் உள்ளங்களே அனைவருக்கும் வணக்கம்,
வாராவாரம்...வளவினுக்குள் வர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.ஆனால்
நேரம் என்னை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு விடுகின்றதே என்ன செய்ய?!!..
வேந்தன் அண்ணா எழுதி இருந்தார் இயந்திர வாழ்க்கை என்று!...உண்மைதான்..
எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்ற வாழ்க்கை. காலநிலையோடும் போராடி நேரத்தோடும் விழுந்தோடி ஓரளவுக்கு வாழ்வின் நிலையை சம நிலைப்படுத்திய படி சமாளிக்கின்றோம்...

எப்ப்படி ஓடிவிட்டது மூன்று மாதங்களும்!!! இப்போது நான்காம் மாதத்தின் நடுவிலும் நிற்கின்றோம்.' காலம் கண்போன்றது" காலம் பொன்போன்றது" என்று சொல்லி வைத்தவர்கள் வாயில் சர்க்கரை அள்ளிப்போடவேண்டும். நினைத்துப்பார்க்கும் போது இனிக்கும் நினைவுகள் தந்திருக்கின்ற நேரங்கள், வருந்த வைக்கின்ற நேரங்கள். வியப்பளிக்கின்ற நேரங்கள். பாடமாகீன்ற நேரங்கள்..இப்படி நமக்கு ஏகப்பட்ட நேரங்கள்..

ஒவ்வொரு விடியலும் இரவைக்கிழிக்கின்றது ஆகவே இரவுகள்(துன்பங்கள்) நிரந்தரமில்லை என்பதை காலமே நமக்கு கற்றுத்தருகின்றது. இரவோடு சேர்ந்து பகலும் இருந்தால் மட்டுமே ஒரு நாள். ஆக "காலம்" இன்பம், துன்பம் இணைதலே வாழ்க்கை என்பதையும் சுட்டித்தருகின்றது.

'எங்களுக்கும் காலம் வரும்!
காலம் வந்தால் வாழ்வு வரும்'
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே" என்று காலத்தை பாசமலரில் பதித்தார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

ஆக நல்லதே நினைத்துவிட்டால் நல்லதே நடக்கும், இதையே நீ எதுவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய் என்றார் சுவாமி விவேகானந்தர்.

'செய்ததற்காக எப்போது வருந்தி விட்டாயோ அதை தவறென்று உணர்ந்து விட்டாயோ அதற்குப்பிறகு அந்த சிந்தனையில் உன் காலத்தை கரைத்து விடாதே என்றார் சுவாமிகள்.

ஆகவே...நேற்று என்பது இறந்துபோனது..நாளை என்பது நாம் அறியாதது...இன்று மட்டுமே எங்கள் கைகளில். அதை வென்று முடிப்பதே நம் கடமையானது. ஆகவே கடமையைச் செய்வோம்...

எங்களுக்கு பாடம் சொல்லித்தந்த காலம் எத்தனையோ!!. நாம் யாருக்கு பாடமாகப்போகின்றோம்"..??? இந்த கேள்வியால் பல ஓட்டைகள் மனசில்.....அதாவது அடிக்கடி மனதை துளைக்கும் கேள்வி இது"

.மகானாக வேண்டாம், மகாத்மா ஆக வேண்டாம். மனிதனாக வாழ்ந்தாலே போதும். !! நிறையச்சொல்ல நினைத்ததில் ஒரு துளியைமட்டுமே தூவி விட்டிருக்கின்றேன்....சுவைத்துப்பாருங்கள். உங்கள் சுவையைக் கூறுங்கள்.

தொடர்ந்து மறுவாரம் சந்திப்போம்





முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---


--

என்றென்றும் நட்புடன்
+நம்பிக்கையுடன்

உங்கள் சுதனின்விஜி

Monday, April 10, 2006

வருடத்தின் நூறாவது நாள்-விழியன்

ஏப்ரல் 10 :

வருடத்தின் நூறாவது நாள். இதில் என்ன சிறப்பு இருக்கின்றது என்ற கேள்வி எழலாம்.சிறப்பு என்று எதுவும் இல்லை.ஆனால் பல மாறுதலுக்கான அழைப்பாக இருக்கலாம்.
இந்நாளில் இல்லை சிறப்பு
உங்கள் மாறுதலுக்கான அழைப்பு..

நம்மில் 90% சதவிதத்தனர் வருடத்திம் துவக்கத்தில், அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி உற்சாகமாக எழுவோம். சரி இந்த வருடம் முதல் தினமும் இவற்றை எல்லாம் செய்வோம் என்று பட்டியல் இடுவோம். எடுத்து காட்டாக, தினமும் காலை 6 மணிக்கு எழுவது (இதுவே தாமதம் தான்), உடற்பயிற்சி செய்வது (நம்மை போல கணிணி முன்னர் நாள் முழுதும் காலம் தள்ளும் மனிதர்களுக்கும், மானிட்டரில்(Monitor) மூழ்கும் மானிடர்களுக்கும் மிக அவசியம்), புத்தகம் வாசிப்பது, தினமும் டையரி எழுதுவது, இன்னும் அவரவர் அவசியத்திற்கேற்ப, தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு உறுதிமொழிகள்(Resolutions) எடுத்திருப்போம்.

இவற்றை நாம் தவறாமல் பின்பற்றுகின்றோமா என்பது தான் கேள்வி. முடிவுகள் எடுத்த உற்சாகத்தில் நாம் ஒரு வாரம், இல்லை பத்து நாள் விடாப்பிடியாக செய்து முடிப்போம். பின்னர் ??? அதே உறுதிமொழிகளை அடுத்த வருடம் எடுப்போம் சில மாறுதல்களோடு..மீண்டும் அதே நிலை..நான் சொல்வது 90% மக்களுக்கு. நீங்க அந்த 10% இருந்தால் ஆனந்தம் தான்.

சரி, இந்த வருடம் ஆரம்பித்து 100 நாள் இன்றோடு முடிகின்றது. சென்சுரி அடிச்சாச்சு. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாட்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றது. ஒரு சின்ன ப்ரேக் எடுத்து நூறு நாளுக்கான ஒரு பத்து நிமிட ஆய்வு நடத்தலாமா?
வெண்தாளும் எழுதுகோளும் தயாரா?
1. உங்கள் உறுதிமொழிகளை எழுதுங்கள்
2. அதில் எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தியுள்ளீர்?
3. சருக்கலுக்கான காரணம் என்ன?

தவறிப்போன செயல்களுக்கும் காரணம் யாரும் அல்ல.நீங்கள் தான். நீங்கள் தான் அனைத்திற்கும் பொறுப்பு. வெற்றிக்கும் சரி தோல்விக்கும் சரி. ஆனது ஆகிவிட்டது இனி இறந்த காலத்தை பற்றி பேசிப்பயனில்லை. எதிர்காலத்தை பற்றி பேசுவோம்.

*எடுத்த உறுதிமொழிகளை மறுபார்வை இடுங்கள்.
*எவற்றை கண்டிப்பாக செய்ய போகின்றீர் என்று உறுதி செய்யவும்
* சிறிது சிறிதாக முடிக்கவும். உதாரணமாக தினமும் வாக்கிங் செல்லவேண்டும் என்று முடிவெடுத்துள்ளீர் என்று வைத்துக்கொள்வோம். முதல் நாளே 2 கி.மீட்டர் நடக்கவேண்டாம். முதல் நாள் 100 அடி நடவுங்கள் போதும்.ஔஉங்கள் மனதிடம் "நான் இன்றைய வேலையை செய்துவிட்டேன்" என 5 முறை கூறவும்.அடுத்த நாள் 200 அடி..அப்படியே படிப்படி....
* எல்லா காரியத்தையும் இப்படி சின்ன சின்னதாக ஆரம்பித்தால் நலம்.உங்களுக்குள்ளேயே தன்னம்பிக்கை உயரும்.
* அதே சமயம் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பது நன்றல்ல.(ஒரே இடத்தில் முன்னேறாமல் இருப்பது சாக்கடை என சொல்லுவார்கள்). முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கவேண்டும்.
* முதலில் கடினமாக இருக்கும். பின்னர் பழகிவிடும்.

முன்பே சொன்னது போல எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள் தான்.நீங்கள் மட்டும் தான்.

வருடத்தின் நூறாவது தின வாழ்த்துக்கள்.

நான் முடித்துவிட்டேன். இனி நீங்கள் துவங்கலாம்.

^^ விழியன் ^^
http://vizhiyan.wordpress.com

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4